திருச்சியில் பரபரப்பான சாலையில் போதை ஆசாமி அட்டகாசம்

திருச்சியில் பரபரப்பான சாலையில் போதை ஆசாமி அட்டகாசம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கண்டோன்மென்ட் சாலையில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிர்புறம் மறைந்த பாரத பிரதமர் ஜவர்கலால் நேரு திருஉருவ முழு சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றிலும் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி கட்டுப்பாட்டில் நிர்வகித்து வருகிறது.

அந்தப் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக அளவு காணப்படும். இந்நிலையில் அந்த செயற்கை நீரூற்றில் கஞ்சா போதையில் இருந்த ஒருவர் அரை நிர்வாணமாக குளிக்கத் தொடங்கினார். பின்னர் நேரு சிலை முன்பு வழிபட்டு மீண்டும் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். உச்சி வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக குளித்துக்கொண்டிருந்த போதை ஆசாமியை அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டினர்.

உடனே கீழே இறங்கி வந்து சற்று தூரம் நடந்து சென்றபோது போதை தலைக்கேறியதால் நடுரோட்டில் உட்கார்ந்தார். இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை தொடர்ந்து இது குறித்து கண்டோன்மெண்ட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் அந்த போதை ஆசாமியை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO