மலைக்கோட்டை உச்சியில் மயங்கி விழுந்த மருத்துவர் - காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

மலைக்கோட்டை உச்சியில் மயங்கி விழுந்த மருத்துவர் - காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மலைக்கோட்டை மேலே உள்ள விநாயகரை தரிசனம் செய்ய 400க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும். இந்நிலையில் பெண் மருத்துவர் படி ஏறி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அதன் பின் அவரால் கீழே இறங்கி வர முடியாத நிலை உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த பக்தர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த கண்டோன்மென்ட் தீயணைப்பு வீரர்கள் போர்வையை தொட்டில் கட்டி அதில் பெண் மருத்துவரை அமர வைத்து கீழே இறக்கி கொண்டு வந்தனர்.

இதுக்குறித்து மருத்துவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பின் அவர்கள் வந்ததுடன் அவரை அனுப்பி வைத்தனர். இச்செயலை கண்ட மற்ற பக்தர்கள் தீயணைப்புத் துறை வீரர்களை வாழ்த்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision