திருச்சி அருகே கார் பள்ளத்தில் பாய்ந்து கோர விபத்து - 3 பேர் பலி!!

திருச்சி அருகே கார் பள்ளத்தில் பாய்ந்து கோர விபத்து - 3 பேர் பலி!!

திருச்சி -  மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 8 மாதங்களாக ஊரடங்கு காரணமாக போக்குவரத்து குறைவாக இயங்கிவந்தது. இதனால் சில மாதங்களாக விபத்துக்கள் ஏற்படாத நிலையில் இருந்தது.

Advertisement

இந்நிலையில் இன்று திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை விராலிமலை பகுதியில் வடகாட்டுப்பட்டி அருகே மதுரை நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது கோர விபத்துக்கு உள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement