பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைப்பு

பணமோசடியில் ஈடுபட்ட  நபர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு கடன் வழங்காமல் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியுள்ளனர்.

 பெரம்பலூர் மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட எதிரியான டெல்லியை சேர்ந்த சுனில்குமார் என்பவரை தேடிவந்த நிலையில் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு காரைக்குடியில் கைது செய்து பெரம்பலூர் சிறையில் அடைத்தனர். 

தனிப்படை போலீசாரின் சிறப்பான பணியை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் V.பாலகிருஷ்ணன்., நேற்று 07.03.2022-ம் தேதி அவர்களை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO