தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது

தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது


 கோயமுத்தூர், திருப்பூர் மற்றும் திருச்சி மாநகரத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,  திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், இருசக்கர வாகனம் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கவும், வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 15.03.22-ந்தேதி கோட்டை கா.நி எல்லைக்குட்ப்பட்ட மதுரைரோடு, ராஜா பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த நபரிடம் கத்தியை காட்டி மீரட்டி ரூ.2000/- பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட எதிரி ராஜா (எ) சகாய ஆரோக்கிய தர்மராஜ் வயது 57, த.பெகுழந்தைசாமி என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் எதிரி ராஜா (எ) சகாய ஆரோக்கிய தர்மராஜ் கோயமுத்தூர் மாநகரத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடியதாக 6 வழக்குகளும், திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடியதாக 11 வழக்குகளும், மேலும் திருச்சி மாநகரத்தில் நான்கு சக்கர வாகனத்தை திருடிய வழக்கு உட்பட, பல்வேறு காவல் நிலையங்களில் பல (ஆக மொத்தம் 22 வழக்குகள்) நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரி ராஜா (எ) சகாயஆரோக்கிய தர்மராஜ் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர் எனவும், பொதுமக்களின் இருசக்கர வாகனங்களை திருடும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரி தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப.. அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையிளை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa


#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO