கத்தியை காண்பித்து வழிப்பறி செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

கத்தியை காண்பித்து வழிப்பறி செய்த நபர் குண்டர்  சட்டத்தில் கைது

பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்புதூரில் கடந்த 08.02.2022-ம்தேதி நாகநாதர் டீ கடை காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பறித்து சென்றது தொடர்பான கொடுத்த புகாரின்பேரில் பாலக்கரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும், எதிரி விஜய்பாபு வயது 24 கைது செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். 

மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் எதிரி விஜய்பாபு மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.

எனவே, மேற்படி எதிரி விஜய்பாபு தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அறிக்கையினை சம்மந்தப்பட்ட பரிசீலனை செய்து, பாலக்கரை திருச்சி காவல் மாநகர ஆய்வாளர் காவல் கொடுத்த ஆணையர் G.கார்த்திகேயன் மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

 அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO