நன்னடத்தை பிணை மீறிய குற்றவாளிகள் சிறையில் அடைப்பு

நன்னடத்தை பிணை மீறிய குற்றவாளிகள்  சிறையில் அடைப்பு

திருச்சி மாநகரம் காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, சரித்திரப்பதிவேடு ரவுடிகள் ஜான்மிலின் கிருஸ்டோபர் 22, மற்றும் லெட்சுமணன் 27 ஆகியோர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக காந்திமார்க்கெட் காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி எதிரிகளை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் அவர்கள் முன்பு ஜான்மிலின் கிருஸ்டோபர் மற்றும் லெட்சுமணனை ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி எதிரிகள் தாக்கல் செய்துள்ளார்கள்.

மேற்படி ஜான்மிலின் கிருஸ்டோபர் மற்றும் லெட்சுமணன் ஆகியோர் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, தாங்கள் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி கத்திய காட்டி வழிப்பறி செய்தல் மற்றும் பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் அவர்மீது காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் கடந்த 14.02.22-65 வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே உறுதிமொழி பிரமாண பத்திரத்தில் கொடுத்த நன்நடத்தை நிபந்தனைகளை மீறிய மேற்கண்ட நபர்களை 28.02.22-ந்தேதி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும்,

மேற்படி நபர்கள் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 234 நாட்களும் மற்றும் லெட்சுமணன் 342 நாட்களும் சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேற்படி ரவுடிகள் ஜானிமில்ன் கிருஸ்டோபர் மற்றும் லெட்சுமணன் ஆகியோர் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO