சிலிண்டர் திருடிய நபர் கைது

சிலிண்டர் திருடிய நபர் கைது

 திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தில்லைநகர் மற்றும் உறையூர் பகுதிகளில் சிலிண்டர் சப்ளைக்காக இறக்கி வைக்கும் மையங்களிலும், சிலிண்டர்களை சப்ளைக்காக வீட்டிற்குள் சென்று வருவதற்குள் வண்டியில் இருக்கும் சிலிண்டர்களை திருடிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

பல நாட்களாக எரிவாயு சிலிண்டரை திருடி வந்த  வாலிபரை கையும் களவுமாக பிடித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் இன்று  ஒப்படைத்தனர். மேலும் இதுவரை எத்தனை சிலிண்டர் திருடியுள்ளார்? எங்கு விற்று உள்ளார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision