நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழக முழுவதும் இன்று நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் நிலுவையில் உள்ள கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கைவிட வேண்டும். இந்தியா முழுவதும் அனைத்து பேராசிரியர்களுக்கும் ஒரே சரிசமமான 65 வயது என்ற ஓய்வு வயதை நிர்ணயிக்க வேண்டும்.

கல்லூரிகளில் காலியாக உள்ள நான்காயிரம் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். நீண்ட காலமாக மாற்றுப் பணியில் இருக்கும் பேராசிரியர்கள் உடனடியாக மாற்றுப் பணிகளை ரத்து செய்ய வேண்டும். இணை பேராசிரியர் பணி மேம்பாட்டிற்கு கட்டாயம் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்வு செய்ய வேண்டும்.

மத்திய அரசு உடனடியாக எட்டாவது ஊதிய குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பியும் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் 80க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision