திருச்சி மாநகரில் செல்போனை பறித்துச் சென்ற திருடனுக்கு தர்ம அடி

திருச்சி மாநகரில் செல்போனை பறித்துச் சென்ற திருடனுக்கு தர்ம அடி

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் போஸ். இவர் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு போன் வரவே வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில்  போஸ் பேசிக் கொண்டிருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர். ஒரு கணம் திகைத்துப் போன போஸ் சுதாரித்துக் கொண்டு, திருடன், திருடன் பிடியுங்கள் என கத்தினார். அங்கிருந்த பொதுமக்கள் திருடனை பிடித்து மின் கம்பம் ஒன்றில் கட்டி வைத்தனர். மேலும் இது குறித்து கண்ட்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு விசாரணை நடத்தியதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜய் (20) என்பது தெரியவந்தது. பின்னர் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் விஜய் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO