மலைக்கோட்டையில் மெகா தீப திரி தயாரிக்கும் பணி

மலைக்கோட்டையில் மெகா தீப திரி தயாரிக்கும் பணி
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபம் வருகிற 6ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவின்போது உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு உள்ள 50 அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 300 மீட்டர் நீளமுள்ள திரி வைத்து, நல்லெண்ணெய், நெய்

இலுப்பை எண்ணெய் ஒரு லிட்டர் 900 லிட்டர் எண்ணெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாதீபம் ஏற்றுவதற்காக 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒன்று சேர்ந்து பருத்தி துணியால் 300 மீட்டர்  திரியினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தத் திரியானது கொப்பரையில் ஏற்றப்பட்டு

பின்னர் நன்கு எரியும் வகையில் எண்ணெய் ஊற்றி ஊற வைக்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறநிலையத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO