தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.  இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த மாதம் 12-ந்தேதி அன்று முதல் தட்டு சாத்துதல், 19-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 26-ம் தேதி காப்பு கட்டுதல், கதவடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானையில் பொங்கல் வைத்தல், திருக்கதவு திறந்து சிறப்பு பூஜை, பூச்சொரிதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் தலையலங்காரம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் 31 அடி உயரம் உள்ள பெரிய தேரையும், 30 அடி உயரம் உள்ள சிறிய திருத்தேரையும் பக்தர்கள் தலையிலும் தோளிலும் சுமந்து கொண்டு திருவீதி உலா சென்றனர். பெரிய தேரில் ஓலைப் பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரைகாளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருத்தேர் திருவீதிஉலா

கோட்டைமேடு, வழியாக சென்று பண்ணை வீடு பகுதியை அடைந்தது. இதைதொடர்ந்து சந்தைபேட்டை, திருச்சி சேலம் மெயின் ரோடு வழியாக சென்று வானப்பட்டறை மைதானம் சென்று பின்னர் எல்லை உடைக்கும் நிகழ்வும், வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் பகுதியை சேர்ந்த 18 பட்டி கிராம ஊர் பொதுமக்கள்,கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் பூசாரிகள் செய்திருந்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருச்சி போலீஸ் எஸ்பி வருண்குமார் மேற்பார்வையில், முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் தலைமையில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision