அமைச்சர் உதயநிதியை வரவேற்க, அமைச்சர் ஆதரவாளர்கள் வைத்த பேனர் கிழிப்பு

அமைச்சர் உதயநிதியை வரவேற்க, அமைச்சர் ஆதரவாளர்கள் வைத்த பேனர் கிழிப்பு

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (31.07.2024) மற்றும் நாளை (01.08.2024) திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் திருச்சி திருவரம்பூர் மற்றும் துறையூர் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் புதிய திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

நாளை 01.08.2024) பச்சை மலையில் மேற்கொள்ளப்படும் பசுமை சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் சூழியல் சுற்றுலா மழையேற்றம் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது என பல்வேறு திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்தும், புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னேற்பாடுகள் பணி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறையூர் பச்சைமலை வருவதை ஒட்டி அவரை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பச்சமலை தென்புறநாடு ஊராட்சி சித்தூர் பகுதியில், அவரை வரவேற்க உப்பிலிபுரம் பகுதியில் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர் மகேஸ் ஆதரவாளர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள 5-த்திற்க்கும் மேற்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பேனர்களை கிழித்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision