திருச்சி காவல் ஆய்வாளர் குறித்து வியாபாரிகள் போஸ்டர்

திருச்சி காவல் ஆய்வாளர் குறித்து வியாபாரிகள் போஸ்டர்

சென்னையை சேர்ந்த 27 வயதுடைய இளம் பெண் கிரிஜா. இவர் திருச்சி பாலக்கரை பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் புகார் ஒன்றின் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றதாகவும், அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுகுமார் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து தன்னுடைய கைபேசி எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பி பேசி வந்ததாகவும், இது தொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

காவல் ஆய்வாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து தற்பொழுது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது இது ஒரு புறமிருக்க காவல் ஆய்வாளர் மீதான குற்றச்சாட்டை கண்டித்தும் அவருக்கு ஆதரவாக காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் மேலும் காவல் ஆய்வாளர் மீது பொய்யான புகார் அளித்த அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், காவல் ஆய்வாளரின் செயல்பாடுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமார் காத்திருப்பு பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ரத்து செய்து மீண்டும் அதே காவல் நிலையத்தில் பணியாற்ற வேண்டுமென திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn