துப்புரவுத் தொழிலாளர் மற்றும் தூய்மைக் காவலரை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

துப்புரவுத் தொழிலாளர் மற்றும் தூய்மைக் காவலரை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் ஊராட்சியில் 1 கோடி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக நாட்றாங்கால் அமைக்க விதைகளை மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், பண்ணப்பட்டி கிராம துப்புரவுத் தொழிலாளர் மற்றும் தூய்மைக் காவலர்கள் வழங்கினார்கள்.

மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் 2 பேரையும் பாராட்டி, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அருகில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn