திருச்சியில் உள்ள பள்ளியில் தேசிய கொடியை ஏற்றிய சமையல் பணியாளர் - ஆசிரியர்கள் பெருமிதம்

திருச்சியில் உள்ள பள்ளியில் தேசிய கொடியை ஏற்றிய சமையல் பணியாளர் - ஆசிரியர்கள் பெருமிதம்

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில் சமையலராக பணிபுரியும் சரஸ்வதி தேசியக்கொடி ஏற்றி சிறப்பித்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மேனாள் முதல்வர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் R.புவனேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியர் K. S. ஜீவானந்தன் மற்றும் ஆசிரியர்கள் N.உமா, P. சகாயராணி, சத்துணவு அமைப்பாளர் ராணி இவர்களுடன் பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். வருகை தந்த அனைவருக்கும் இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn