திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சுதந்திர தின விழா

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சுதந்திர தின விழா

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்
ஆணையர் முஜிபுர் ரகுமான் தேசிய கொடி ஏற்றி வைத்து பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ 2000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (15.08.2021) சுதந்திர தின விழா இவ்விழாவில் ஆணையர் முஜிபுர் ரகுமான் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

மாநகராட்சியில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் கொரோனா (covid - 19) நோய் தடுப்பு பணியில் அர்பணிப்புடன் சிறப்பாக பணிபுரிந்த 16 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி புரிந்து நிறைவு செய்த 12 பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் ஆணையர் வழங்கினார்.  

பின்னர் அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு காந்தி சந்தை அருகில் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி பின்பு காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.

மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகரப் பொறியாளர் அமுதவள்ளி, நகர் நல அலுவலர் யாழினி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், உதவி ஆணையர்கள் நா.சண்முகம், தயாநிதி, திருஞானம், கமலக்கண்ணன் செல்வபாலாஜி மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn