திருவெறும்பூர் அருகே குண்டூர் ஏரிகரையில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி செல்லும் வழியில் உள்ள குண்டூர் ஏரிக்கரை ஓரத்தில் (திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை) முகவரி தெரியாத சுமார் 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி உள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த முதியவர் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார் .இது சம்பந்தமாக நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இங்கு வந்தார் என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்து போன முதியவர் நீல நிறத்தில் முழுக்கை சட்டையும், நீலம் மற்றும் பழுப்பு நிறத்தில் கட்டம் போட்ட கைலியும் அணிந்திருந்தார்.இவர் சுமார் 6 அடி உயரமும், மெலிந்த தேகமும், தாடியுடன் கூடிய வட்ட முகம் மற்றும் மாநிறம் கொண்டவர்.
இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால்
நவல்பட்டு காவல் நிலையம் 9498100664
காவல் ஆய்வாளர் – 9498165031
சிறப்பு உதவிஆய்வாளர்-9498158378.ஆகிய எண்களில் ஏதாவது ஒரு எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு நவல்பட்டு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision