சட்ட விரோதமாக மதுபானம் பெற்ற வட மாநிலத்தை சேர்ந்த உட்பட நான்கு பேர் கைது

சட்ட விரோதமாக மதுபானம் பெற்ற வட மாநிலத்தை சேர்ந்த  உட்பட நான்கு பேர் கைது

திருவரம்பூர் அருகே துவாக்குடி ரிங் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பதாக துவாக்குடி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது.அதனைத் தொடர்ந்து நாகராஜன் தலைமையில் துவாக்குடி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்றதாக ஒடிஸா மாநிலம் தோத்ராவைச் சேர்ந்த ரத்தன் ஹரிஹரன் (31), பீஹார் மாநிலம் பாட்னா, தோபாவானைச் சேர்ந்த பகவான். சரண் சவ்ஹான், சாக்கெட் குமார் (30),

புதுக்கோட்டை மாவட்டம் மலையேறிப்பட்டியைச் சேர்ந்த சத்யமூர்த்தி ஆகிய 4 பேர் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பொழுது கையும் களவுமாக அவர்களை நாகராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision