திருச்சி காவேரி பாலம் விரைவில் மூடப்படுகிறது

திருச்சி காவேரி பாலம் விரைவில் மூடப்படுகிறது

திருச்சி காவேரி பாலத்தில் ரூ.6.87 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவேரி பாலம் மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாகனப் போக்குவரத்துக்கு மாற்று வழியாக ஓயாமறி மின் இடுகாடு ➡ கும்பகோணத்தான் சாலை ➡ சுங்கச்சாவடி என்: 6 வழியாக திருவானைக்கோவில் செல்லலாம். வாகனங்கள் / பேருந்துகள் ஆகியவற்றை அவ்வழியில் அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO