திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப்பள்ளி பொன்விழா - அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப்பள்ளி  பொன்விழா - அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி பொன்விழா ஆண்டு விழா என்.எஸ். கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பெரியார் கல்விக்குழுங்களின் செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 50 ஆண்டு பொன்விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் க.திலகவதி, மா.ராசாத்தி, இரா.விஜயலட்சுமி ஆகியோருக்கு அமைச்சர்கள் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். முன்னதாக இப்பள்ளியின் முதல் மாணவியும், நாகம்மை குழந்தைகள் இல்லக் காப்பாளர் ஆர்.தங்கத்தாள்- அவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு விருது வழங்கி பாராட்டினார்.

மேலும் 2022 2023 ஆம் கல்வி ஆண்டில் 10, மற்றும் 12 ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சியை ஈட்டி தந்த அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. 10, 12 ஆம் வகுப்பு சிறப்பிடம் பெற்ற மாணவி ஆயிஷா ரிஸ்வானுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கலந்து கொண்டனர். இவ்விழாவில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராமச்சந்திரன், பதிவாளர் டாக்டர் சிறீவித்யா, பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை, பெரியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் க.வனிதா, ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் கீதா, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செண்பகவள்ளி, பெரியார் தொடக்கப்பள்ளி தாளாளர் ஞா.ஆரோக்கியராஜ்,

திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், பணித்தோழர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision