பணத்திற்காக வாலிபரை காரில் கடத்திய பாஜக நிர்வாகியை கைது செய்த திருச்சி போலீஸ்

பணத்திற்காக வாலிபரை காரில் கடத்திய பாஜக நிர்வாகியை கைது செய்த திருச்சி போலீஸ்

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் மணப்பாறை தனியார் பள்ளி அருகே சொந்தமாக கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் மகன் சேகர் சரண் (35). இவரிடமிருந்து ஞானப்பிரகாசம் என்பவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சுமார் 5 லட்சம் கடன் வாங்கியதாகவும்,

 மேற்படி கடன் பிரச்சனை காரணமாக சேகர் சரண் மற்றும் அவருடன் வந்த இருவர் ஞானப்பிரகாசத்தினுடைய கடையில் இருந்த அவரது மகன் எபினேஷன் (22) என்பவரை காரில் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்றதாக மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து மணப்பாறை காவல் நிலைய ஆய்வாளர் கோபி தலைமையிலான ஐந்து காவலர்கள் கொண்ட தனிப்படை அவர்களை தேடி வந்த நிலையில்,

இளைஞரை காரில் கடத்தியவர்கள் பாண்டிச்சேரியில் சென்று கொண்டு இருந்த போது தகவல் தெரிவித்து கடத்திலில் ஈடுபட்டவர்களை பிடித்து மணப்பாறை காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சேகர் சரண் பாண்டிசேரி பிஜேபி அறிவுசார் பிரிவில் இணை அமைப்பாளர் (பொறுப்பு) பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision