திருச்சி எஸ்.ஐ.டி. கல்லூரிக்கு நவீன சானிடைஸர்கள்

திருச்சி எஸ்.ஐ.டி. கல்லூரிக்கு நவீன சானிடைஸர்கள்

திருச்சி கிங்ஸ் ரோட்டரி சங்கம், திருச்சி கிளவுட்ஸ் ரோட்டரி சங்கம், திருச்சிராப்பள்ளி பட்டர்பிளைஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கல்லூரி மாணவிகள் நலனுக்காக நவீன நாப்கின் எரியூட்டிகள் (சானிட்டைசர்கள்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000த்தின் 2024-25-ம் ஆண்டுக்கான மீடியா பப்ளிசிட்டி ஆபிஸர் - டாக்டர் கே.ஸ்ரீனிவாசன் - சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு அந்த 2 எரியூட்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் கே. விஜய்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதில் ரோட்டரி மாவட்ட செயலாளர் (நிகழ்ச்சி) எஸ். கிருஷ்ணமூர்த்தி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கோவன், ஜானகி ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ரோட்டரி சங்கத்தின் தலைவர்கள் எஸ். தங்கவேல், அழகேசன், சுபா பிரபு, செயலாளர்கள் ராம்பிரகாஷ், சரவண குமார், பராசக்தி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் என்ஜினீயர் கோவிந்தராஜ், வக்கீல் ஹனீபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்