மணப்பாறை அருகே தூக்கிட்டு மூதாட்டி உயிரிழப்பு.

மணப்பாறை அருகே தூக்கிட்டு மூதாட்டி உயிரிழப்பு.

மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியில்  நேற்று மாலை தூக்கிட்டு உயிரிழந்த மூதாட்டி உடலை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் அந்தோனி மனைவி லில்லிதெரசி(65). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி தாழ்வாரத்தில் சேலையை கொண்டு தூக்கிட்டு உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து உறவினர்களால் ஈமச்சடங்கிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மணப்பாறை  போலீஸார் மூதாட்டி உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சமபவம் குறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision