திருச்சியில் நாளை (24.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (24.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மெயின்கார்டு கேட் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சர்க்கார் பாளையம் பீடரில் நாளை (24.07.2024) (புதன் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இந்த பீடரில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான சஞ்சீவிநகர், ஏ.ஆர்.கே.நகர், பனையக்குறிச்சி, சர்க்கார்பாளையம், அரியமங்கலம், ரிட்ச் அவென்யூ, விசாலாட்சிநகர், கீழமுல்லக்குடி, காந்திபுரம், ஒட்டக்குடி, புத்தாபுரம், வேங்கூர், கீழமுறுக்கூர், நடராஜபுரம்,

வி.எஸ். நகர், அரசங்குடி, தோகூர், கீழவிலாங்குளம் ஆகிய பகுதிகளில் நாளை (24.07.2024) காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது. என்று திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இந்தியன் பேங்க் காலனி மின்பாதைகளில் டவர் லைன் நிலைநிறுத்தும் பணிகள் நாளை (24.07.2024) (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (24.07.2024) காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை லூர்து சாமிபிள்ளைதெரு,

எல்.ஐ.சி. காலனி மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி இயக்கலும் காத்தலும் கிழக்கு செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision