போக்சோவில் திருச்சி வாலிபர் கைது!

போக்சோவில்  திருச்சி வாலிபர் கைது!

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த 17 வயதான 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரின் பெற்றோர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்று உள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Advertisement

இது குறித்து உடனடியாக திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். அங்கு சென்ற மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். முதலில் மௌனம் காத்த மாணவி அதன் பின்னர் தனக்கும் எடமலைப்பட்டிபுதுார் அரசு காலனியை சேர்ந்த யுவராஜ்(19) என்பவருக்கும் காதல் இருப்பதாகவும், இதன் காரணமாக, தான் கர்ப்பமாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

இதனை தொடர்ந்து யுவராஜ் மீது வழக்கு தொடர்ந்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.