திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 3 இலகுரக (LMV) மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 8 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட 
உள்ளது. வருகின்ற 10.02.2022-ம்தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகர 
ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் (03.02.2022) மற்றும் (09.02.2022)-ம் தேதி காலை 10
மணிமுதல் மாலை 5 மணிவரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் 
நாளான 10.02.2022-ம்தேதி காலை 8 மணிமுதல் 10 மணிவரை தங்களது 
ஆதார் அட்டையுடன் ரூபாய் 5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18% முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn