கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள், உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சிறப்பு கய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் வாரியத்திற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் பெண் விருதாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோர்கள் அலுவலர் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளதால்,

தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் 14.11.2022க்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்குமாறும், மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 0431-2413796 என்ற எண்ணை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்டஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார். தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO