எலி பசையால் பல் துலக்கிய பெண் உயிரிழப்பு.

எலி பசையால் பல் துலக்கிய பெண் உயிரிழப்பு.

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி (35). இவரது மனைவி ரேவதி (27). இவர் கே.கே.நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

வழக்கம் போல் காலை ரேவதி தூக்க கலக்கத்தில் பற்பசை என நினைத்து எலிக்கு வைக்கப்படும் பசையை (விஷம்) வைத்து பல் துலக்கியுள்ளார். பின்னர் வேலைக்கு சென்ற ரேவதி, மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வாந்தி எடுத்துள்ளார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision