சித்திரை தேரோட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

சித்திரை தேரோட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி பொன்மலை சீட்டைப் பகுதியில் அமைந்துள்ள செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

இந்த சித்திரைத் தேரோட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வடம்பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் தர்மராஜ், வரதராஜன், முருகானந்தம், தவசீலன், செந்தில் மற்றும் கோயில் நிர்வாக கமிட்டியினர் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO