திருச்சி மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு யோகா பயிற்சி

திருச்சி மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு யோகா பயிற்சி

திருச்சி மத்தியசிறையில் சுமார் 1700-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இவர்கள் வெளியில் செய்த குற்றங்களை நினைத்தும், தனது குடும்பத்தினருடைய நிலையை நினைத்தும், மனஅழுத்தத்துக்குள்ளான சிறைவாசிகளது மனஅழுத்தத்தை போக்கவும்,

சிறைவாசிகளது உடல்நலத்தை பேணிக்காக்கவும், தினசரி யோகா பயிற்சி அளித்தால் நலமானதாக இருக்குமென கருதி, காவல்துறை இயக்குநர் / தலைமை இயக்குநர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அம்ரேஷ் புஜாரி உத்தரவின்படி

ஒவ்வொரு ஞாயிறு நீங்கலாக தினசரி காலை 06.30 மணி முதல் 07.00 மணி வரை (15.04.2023) முதல் அனைத்து சிறைவாசிகளுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn