முதலமைச்சர் வருகை - பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு

முதலமைச்சர் வருகை - பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சித்தலைவர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சிராப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (22.03.2024) மாலை 04:00 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை தந்து தஞ்சாவூர் வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். 

இதனால் அரசு பாதுகாப்பு காரணம் கருதி இன்று (21.03.2024) முதல் தமிழ்நாடு முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் நாளை (22.03.2024) மற்றும் மறுநாள் (23.03.2024) அன்று திருவாரூர் மாவட்டத்திலிருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்க்கு வருகை தந்து சென்னை செல்ல உள்ளார். 

 மேற்சொன்ன வழிகளில் எந்தவித ட்ரோன்கள் இயக்கத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்படுகிறது. எனவே இன்று (21.02.2023) முதல் (23.03.2024) வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision