இளைஞர் தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பாம்பாட்டிப்பட்டி முகவனூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகநாதனின் மகன் ஜீவபாரதி (24). இவர் டிப்ளமோ படித்துவிட்டு விவசாய வேலை செய்து வந்தார்.

 இவரது தந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வையம்பட்டி ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் அப்பா, மகன் இருவருக்கும்  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வீட்டில் தனியாக இருந்த ஜீவபாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision