திருச்சியில் வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் -பொதுமக்கள் அச்சம் - தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு!!

திருச்சியில் வழக்கறிஞரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் -பொதுமக்கள் அச்சம் - தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு!!

திருச்சி அல்லிதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் சந்திரன் தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது டாட்டா சுமோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழக்கறிஞர் சந்துருவை வெட்டினர். பதறியடித்து அங்கிருந்து அலறியடித்தப்படி ஓடியதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் குவிந்துள்ளனர். உடனே அந்த மர்ம கும்பல் நான்கு சக்கர வாகனத்தில் தப்பி ஓடினார். 

Advertisement

பின்னர் படுகாயமடைந்த சந்துருவை தென்னூரிலுள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த வந்த தில்லைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் வழக்கறிஞர் சந்துருவை வெட்டியவர்களை கைது செய்ய கோரி சந்திராவின் ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் இச்சம்பவம் நடந்த அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.