திருச்சியில் ஆயிரம் காபி இலவசம் - திறப்பு விழா சலுகை

திருச்சியில் ஆயிரம் காபி இலவசம் - திறப்பு விழா சலுகை

திருச்சி தில்லைநகர் 11 கிராஸ்சில் கேஸ்ட்ரோ கேர் மருத்துவமனை அருகில் புதிய காபி ஷாப் திறப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. இன்று முதல் ஆயிரம் பேருக்கு அல்லது முதல் 1000 காபி இலவசம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பில்டர் காபி ரூபாய் 10 ரூபாய்க்கு தருவதாகவும் நோட்டீஸ் மூலம் அறிவித்துள்ளனர்.47வது கிளையாக திருச்சியில் தில்லைநகரில் மைசூர் காபி ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் விரைவில் 50க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இருக்கும் என  நிறுவனத்தினர் பெருமைப்பட தெரிவிக்கின்றனர்.

திருச்சியில் ஸ்ரீரங்கம், சமயபுரத்தை தொடர்ந்து திருச்சி தில்லை நகர் பகுதியில் மைசூர் காபி ஹவுஸ் பில்டர் காபி ஒன்று பத்து ரூபாய்க்கு வழங்குகிறது. திறப்பு விழா அறிவிப்பாக ஆயிரம் காப்பி இலவசம் என அறிவித்த நிலையில் ஏராளமான குவிந்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....... https://t.co/nepIqeLanO