10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு - அமைச்சர் வாழ்த்து மடல்

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு - அமைச்சர் வாழ்த்து மடல்

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த பொது தேர்வை எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள என் அன்பு மாணவச் செல்வங்களுக்கு அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.

நீங்கள் பயின்ற ஒரு அறைதான், நண்பர்களோடும், ஆசிரியர்களோடும் மகிழ்ச்சியாக உரையாடிய ஒரு அறைதான் உங்களுக்கான தேர்வு அறை. உங்களின் ஆசிரியர்கள்தான் தேர்வறை கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள். உங்களின் நண்பர்கள் தான் உங்களைச் சுற்றி அமர்ந்து தேர்வு எழுதுவார்கள். அது உங்களின் இடம்.

ஆகவே எதை நினைத்தும் பதற்றம் அடையாதீர்கள். பயம் கொள்ளாதீர்கள். தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். அதுதான் உங்களுக்கான வெற்றியைத் தேடித் தரும். மகிழ்ச்சியோடு சென்று வாருங்கள் வாழ்த்துகள்.  - அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision