திருவானைக்காவல் பகுதியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை - 11 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்!

திருவானைக்காவல் பகுதியில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை - 11 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்!

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் மணல்மேடு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் வீட்டு வாசலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

திருச்சி திருவானைக்கோவில் மணல்மேடு பகுதியில் வசித்து வருபவர் முருகன் (50). இவருடைய மனைவி புஷ்பவள்ளி. முருகன் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். அதே பகுதியில் பரமேஸ்வரி என்பவரின் கறிக்கடையில் முருகன் கடந்து செல்லும் போது கடந்த 2 நாட்களுக்கு முன்பாக நாய் குரைத்ததாக சண்டை வந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார் முருகன்.

Advertisement

இந்நிலையில் வீட்டில் முருகன் இருப்பதை அறிந்த கொலையாளிகள் 11 பேர் முருகனை கழுத்தறுத்து வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதில் திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(24), நரேஷ்(24), செல்வகுமார்(20), ஹரிஹரன்(19), ராஜேஷ் கண்ணன்(20) அருண்குமார் (19), முரளி(22) சச்சிதானந்தம் (20) ஆகியோரும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மனோஜ் குமார்(20), கோபாலகிருஷ்ணன் (20) மற்றும் மண்ணச்சநல்லூர் பாலா என்கிற தன வேந்திரன் (20) ஆகியோர் முருகனின் கழுத்தறுத்து வெட்டி கொலை செய்ததாக தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.