மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை 37 ஆயிரம் கொள்ளை.

மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை 37 ஆயிரம் கொள்ளை.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வெ .செட்டியபட்டியில் வசித்து வருபவர் வெள்ளையன் மகன் விஜயகுமார் (32). இவர் வையம்பட்டியில் உள்ள தனியார். பாரா மெடிக்கல் கல்லூரியில் நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். அலுவல் காரணமாக விஜயகுமார் மணப்பாறையில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் அவரது தந்தை வெள்ளையன் (60), தாய் சித்ரா (55)  செட்டியபட்டியில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில்  வெள்ளையனும், சித்ராவும் தோட்டவேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளனர். அப்பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெள்ளையன் வீட்டின் பின் பக்கம் கதவு வழியாக உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த 11 சவரன் நகை, மற்றும் ரூபாய் 37 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடன் உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு வீட்டின் பின்புற கதவு வழியாக தப்பி சென்றுள்ளான்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்  துணை கண்காணிப்பாளர் ராமநாதன், வையம்பட்டி காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்பநாய் லிலீ மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO