திருச்சியில் சிறுமிகளை திருமணம் செய்த 2 பேர் கைது

திருச்சியில் சிறுமிகளை திருமணம் செய்த 2 பேர் கைது

திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் மாரி. இவருடைய மகன் சூர்யா (வயது 24). மாரி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் சூரியாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாய் பெண் பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த தேங்காய் வியாபாரியின் 11 வயது மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அந்த சிறுமியின் அண்ணனான 17 வயது சிறுவனுக்கு, சூர்யாவின் உறவுக்காரப் பெண்ணான 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவனுக்கு திருமணமானது. கொரோனா ஊரடங்கில் சில நாட்களுக்கு முன்பு 11 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் சைல்டு லைனுக்கு புகார் அளித்தனர்.

பின்னர் அங்கு சென்ற அதிகாரிகள் 2 சிறுமி மற்றும் 17 வயது சிறுவனை மீட்டு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் சூர்யா மீது வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவன் மீது போஸ்கோ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சூர்யாவை சிறையிலும், 17 வயது சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். இதில் 11 வயது சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve