‌ திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகை கொள்ளை

‌ திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகை கொள்ளை

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த கொண்டையம் பட்டியில் வசிப்பவர் அழகர்சாமி (63). இவரது மனைவி கலாவதி (53) ஆகிய இருவரும் உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அவரது மகன் ஜெயக்குமார் வீட்டிற்கு புதன்கிழமை இரவு சென்றனர். இந்நிலையில் இன்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அருகில் வசிப்பவர் அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பெயரில் உறவினர்கள் சென்று பார்த்த பொழுது வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே உள்ள சாமி அறையில் உள்ள லாக்கர் மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து தங்க நகைகள் 35 சவரன் மற்றும் முக்கால் கிலோ வெள்ளி பொருட்கள் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சென்னையில் உள்ள அழகர்சாமிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO