திருச்சியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர்: போக்சோ சட்டத்தில் கைது:

திருச்சியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வாலிபர்: போக்சோ சட்டத்தில் கைது:

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியை சேர்ந்த கந்தன் என்பவரது மகன் சங்கர் ( வயது 30).

சங்கர்

இவர் தனது வீட்டு அருகே வசித்து வருபவர் லோகநாதன். இவருக்கு 4 வயது சிறுமி ஒருவர் உள்ளார். பள்ளி முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாடுவது வழக்கம். அவ்வாறு வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சங்கர், கடைக்கு கூட்டிச்செல்வது போல் அழைத்துச் சென்றுள்ளான். சிறுமியும் தனது வீட்டருகே உள்ளவர், தெரிந்த முகம் என்ற எண்ணத்தில் அவருடன் சென்றுள்ளது. தனியாக அழைத்துச் சென்ற சங்கர் ஆள் நடமாட்டமில்ல இடத்திற்கு வந்ததும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர், அங்கிருந்து அழுதுகொண்டே வந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளது. அவர்கள் சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அரியமங்களம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நடந்ததை விசாரித்த அரியமங்களம் காவல்துறையினர், புகாரை பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.தொடர்ந்து, பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சங்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி வனிதாவின் முன்னிறுத்தி மத்திய சிறையில் அடைத்தனர் .