திருச்சி விமான நிலையத்தில் 23 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 23 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து நேற்று திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது இராமநாதபுரத்தை சேர்ந்த முத்து மணி என்ற பயணி உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 23 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் தங்கத்தை வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn