பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் மழையிலும் ஆய்வு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் மழையிலும் ஆய்வு

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று(17.11.2021) திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பொன்மலைப் பகுதியில் காலை முதல்  அனைத்து வார்டுகளிலும் மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்று அதற்கு உடனடியாக தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அரியமங்கலம்  ஏழாவது வார்டு பவளம் நகர் குடியிருப்புப்  பகுதியில்  மழை நீர் சூழ்ந்துள்ளதைப் பார்வையிட்டு அதனை உடனடியாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


 பின்னர்  அரியமங்கலம் எஸ். ஐ .டி  எதிர்புறத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் குளம்போல் தேங்கிக் கிடக்கும் நீரை அகற்றவும், நோய் பரவாமல் பொது மக்களைக் காக்கவும் உடனடியாக  நடவடிக்கை எடுக்க  மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்கள்,முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே .என் .சேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn