திருச்சியில் போண்டாக்குள் 5 ரூபாய் காயின்

திருச்சியில் போண்டாக்குள் 5 ரூபாய் காயின்

திருச்சி மாவட்டம் டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (63). இவர் இன்று காலை நண்பர்களுடன் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் த்ரோ பால் விளையாடிக் கொண்டிருந்தார். 

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே திருச்சி - புதுக்கோட்டை சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் வடை மற்றும் போண்டா உள்ளிட்ட தின்பண்டங்களை நண்பர்களுக்கு வாங்கி வந்திருக்கிறார். 

அதனை நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து தின்றபோது ஒரு போண்டாவில் 5 ரூபாய் நாணயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே தின்பண்டங்களில் பல்லி, கரப்பான் பூச்சி கிடப்பது சகஜம் ஆகிவிட்டது, 

இந்நிலையில் போண்டா-விற்குள் ஐந்து ரூபாய் காயின் இருப்பது ஆச்சரியத்துக்குள்ளாகி உள்ளது. இனி அடுத்த கட்டமாக தின்பண்டங்களில் தங்கம், வெள்ளி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. போண்டா-விற்குள் ஐந்து ரூபாய் நாணயம் இருந்ததை பெரியவர்கள் கண்டதால் சுதாரித்துக் கொண்டனர். ஆனால் சிறியவர்கள் வாங்கி உண்டிருருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision