பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய 5வது வார்டு மாமன்ற உறுப்பினர்

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய 5வது வார்டு மாமன்ற உறுப்பினர்

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. அதேபோல ஒவ்வொரு கோவில்களிலும் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருவானைக்காவல் பகுதி மக்கள் மற்றும் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வேண்டுகோள் இணங்க திருச்சி மாநகராட்சி 5வது வார்டு திருவானைக்காவல், பச்சையம்மன் கோவில் எதிரில் மாமன்ற உறுப்பினர் நிதி ரூ.1 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 5வது வார்டு மாமன்ற மதிமுக உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார் திறந்து வைத்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision