திருச்சியில் நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் சிக்கிய கார் - 7 பேர் கைது

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் சிக்கிய கார் - 7 பேர் கைது

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் நவல்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஒரு காரை நிறுத்த முயன்றனர். அப்போது அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. பின்னர் அந்த காரை விரட்டி சென்று பிடித்த போலீசார் காரை சோதனையிட்ட போது 2 பட்டா கத்தி, 2 வாள், ஒரு குத்து வாள், 2 நாட்டு வெடிகுண்டு இருந்தது தொிய வந்தது. 

இதனை தொடர்ந்து  அந்த காரில் 7 பேரிடம் நடத்திய விசாரணையில் குளித்தலையைச் சேர்ந்த  மணிகண்டன் (29), சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வைரவேல் (36), கருமண்டபம் பகுதியை சேர்ந்த தங்கவேல் ராஜேஷ் (45), அதவத்தூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (28), குளித்தலை பகுதியைச் சேர்ந்த ரவி (21), பெரகம்பி பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் (29), பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்த ராஜா (39) என்பதும் தொிய வந்தது. 

இதனை தொடர்ந்து 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் காரில் வைத்திருந்தது எதற்காக ஏதேனும் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO