திருச்சியில் 50அடி தூரம் பறந்து கார் விபத்து

திருச்சியில் 50அடி தூரம் பறந்து கார் விபத்து

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த 4 பேர் திருச்சியிலிருந்து கரூர்க்கு காரில் புறப்பட்டு சென்றனர். அப்பொழுது திருச்சி எலமனம் அருகே கார் சென்ற பொழுது கட்டுப்பாட்டை மீறி 50 அடி தூரம் பறந்து சாலை ஓரத்தில் வயலிருந்த தென்னை மரத்தில் மோதி நின்றது. காரில் எடமலைபட்டிபுதூர் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் பயணம் செய்தனர்.

தனபால் (42),தாமரைச்செல்வி (39),
 முத்துக்குமார் (50),ஸ்ரீமுகி (17) ஆயோருக்கு காயம் ஏற்பட்டு திருச்சி அட்லஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காரை ஒரு பெண் ஓட்டியுள்ளார். அவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. கார் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி தூரம் பறந்து மரத்தில் மோதியதை சாலை சென்றவர்கள்,  மற்றவர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO