கஞ்சா விற்ற பிரபல ரவுடி உட்பட மூவர் மீது வழக்கு

கஞ்சா விற்ற பிரபல ரவுடி உட்பட மூவர் மீது வழக்கு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பழைய பர்மா காலனி பகுதியில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த துவாக்குடி போலீ சாரை பார்த்ததும் அங்கிருந்து இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

அதில் திருவெறும்பூர் பழைய பர்மா காலனியை சேர்ந்த சந்திரகுமார் (43) என்பவனை பிடித்து, அவன் கையில் இருந்த பையை சோதித்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது அதன் அடிப்படையில் அவனிடம் விசாரித்தபோது, பிரபல ரவுடியான வாழவந்தான்கோட்டை அசோ கர் தெருவை சேர்ந்த பொன்மருது என்பவனிடம் கஞ்சாவை, தானும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த பிரியதர்ஷன் (26) என்பவனும் விற்பதற்காக வாங்கி வந்ததாகவும் கூறினார்.

 அதன் அடிப்படையில் சந்திரகுமாரை துவாக்குடி போலீசார் கைது செய்த தோடு, அவனிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரபல ரவுடி பொன்மருது மற்றும் பிரிய தர்ஷன் ஆகிய இருவரையும் துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision