சாலையில் விழுந்த மரம் - பொறியாளரை பாராட்டிய வாகன ஓட்டிகள்

சாலையில் விழுந்த மரம் - பொறியாளரை பாராட்டிய வாகன ஓட்டிகள்

திருச்சி - கரூர் சாலையில் அல்லுர் பரிசல் துறை அருகே சாலை ஓரம் இருந்த பெரிய பூவரச மரம் பலத்த காற்றில் சாலையில் சாய்ந்து கிடந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மரம் விழுந்த சாலை மேட்டுபகுதியில் இருந்து இறங்கும் வாகனங்கள் வேகமாக வரும் பகுதியாகும்.

அவ்விடத்தில் வெளிச்சம் கிடையாது. உடனடியாக அப்பகுதியில் வசிக்கும் பொறியாளர் துரை.சரவணனுக்கு இதுக்குறித்து தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு வந்தவர் உடனடியாக மரக்கிளைகளை வெட்டி அப்புறபடுத்தினார்.

தகவல் அறிந்தவுடன் இரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் வந்து சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்த பொறியாளரை வாகன ஓட்டிகள் பாராட்டினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision