கார் - பயணிகள் ஆட்டோ மோதல் - 16 பேர் காயம்

கார் - பயணிகள் ஆட்டோ மோதல் - 16 பேர் காயம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது இல்ல காதணி விழா மூவானுர் அருகே உள்ள கண்ணுக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அவருடைய குலதெய்வ கோவிலில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக செங்காட்டுப்பட்டியில் இருந்து அவருடைய உறவினர்கள் பயணிகள் ஆட்டோ ஒன்றில் கண்ணுக்குளம் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அதேபோல் ஸ்ரீரங்கத்திலிருந்து திலிப் குமார் தனது குடும்பத்துடன் பச்சை மலைக்கு சுற்றுலா சென்ற போது பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் கார் மீது பயணிகள் ஆட்டோ மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision